உள்ளூர் செய்திகள்
வைத்தீஸ்வரன்கோவிலில் கிருத்திகை வழிபாடு; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
- செல்முத்துக்குமாரருக்கு 21 வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
- பின்பு, சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.முன்னதாக கிருத்திகை மண்படம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்முத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான வாசனை திரவியப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ப்பபட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.தொடர்ந்து அடிபிரதட்சனம் செய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டார்.