உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2024-12-12 13:01 IST   |   Update On 2024-12-12 13:01:00 IST
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி சாமல் பள்ளம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டு இருந்தது.

மல்லசந்திரத்தில் சேர்ந்த முருகன் மகன் சதீஷ் (வயது 25) என்பவர் கூலி வேலைக்காக சாமல் பள்ளத்தை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் பள்ளி பஸ் மல்லசந்திர பகுதிக்கு வந்தபோது திடீரென்று சதீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த சதீஷின் தாய், தந்தை மற்றும் உறவினர் 100 மேற்பட்டவர்கள் பஸ்டிச முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News