உள்ளூர் செய்திகள்

சினேகா

பண்ருட்டியில்நர்சிங் பள்ளி மாணவி கடத்தல்

Published On 2023-01-31 09:36 GMT   |   Update On 2023-01-31 09:36 GMT
  • சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார்.
  • பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பம் அருகே நரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். அவரது மகள் சினேகா (வயது 16).பண்ருட்டியில் உள்ள நர்சிங் பள்ளியில் படித்து வருகிறார் இவர்கடந்த 28-ந்தேதி நர்சிங் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சினேகாவை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை 

எனவே இதுகுறித்து பண்ருட்டி போலீசில் தாயார் அன்னக்கிளிபுகார் செய்தார். புகார் மனுவில் நர்சிங் பள்ளிக்கு சினேகா செல்லும் போது எல்.என். புரம்,அய்யனார் கோவில் வழியாக செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்தசரண்ராஜ் (22)பழக்கம் ஏற்பட்டு உள்ளது.எனவே சினேகாவை சரண்ராஜ் அழைத்து சென்றுவிட்டதாக கூறி உள்ளார் இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சினேகாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News