உள்ளூர் செய்திகள்
சேலம் அருகே ஆம்னி பஸ்சில் கடத்திய ஒரு மூட்டை கஞ்சா பறிமுதல்
- கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.
- பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூ ரில் இருந்து தேனிக்கு வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து பஸ் டிரை வரிடம் விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து கஞ்சா மூட்டையை பஸ்சில் ஏற்றி விட்ட நபர்கள், பணம் கொடுத்து தேனியில் இறக்கி வைக்குமாறு கூறியது தெரியவந்தது.
இதை அடுத்து பஸ் டிரைவரான தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ப வரை கைது செய்தனர். மேலும் ஒரு மூட்டை கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.