உள்ளூர் செய்திகள்
பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
- கோவை, புதுாரை சேர்ந்தவர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர்,
கோவை, புதுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 73). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினியர்.
இவரது மகன் ஜெயராமன் (37). இவர் தனது மோட்டார் சைக்கிளில்,கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர்பள்ளி, சாந்திவனம் தனியார் பள்ளி அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து, கரூர் நோக்கி சென்ற சரக்கு லாரி, பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். குளித்தலை போலீசார், லாரி டிரைவர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த பழைய அப்பனேரியை சேர்ந்த ராஜி (52), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.