உள்ளூர் செய்திகள்
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சாலை விபத்தில ஒருவர் பலி
- வேன் டிரைவர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மலையூரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 58). இவர் மலையூரில் எலக்ட்ரிகல்ஸ் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பால் ராஜை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வந்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.