உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் விவசாயி காயம்

Published On 2023-11-11 06:12 GMT   |   Update On 2023-11-11 06:12 GMT
வாகன விபத்தில் விவசாயி காயம்

வேலாயுதம்பாளையம் 

கரூர் மாவட்டம் கீழ் ஓரத்தை பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 65).

இவர் தனது மோட்டார் சைக்கிளில் தளவாபா ளையம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.அப்போது மலையம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அங்கிருந்து அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி பாலசுப்ரமணி ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பாலசுப்பிரமணி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோ பால் விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சு நாதன் (32 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News