உள்ளூர் செய்திகள்
கணவனை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்
கரூரில் கணவனை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்
கரூர்,
கரூர் மாவட்டம், சணப்பிரட்டி வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த, ஜெயகாந்தன் மனைவி மதுமதி (வயது 26) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுமதி, திரும்பி வர வில்லை.
உறவினர்களின் வீடுகளுக்கும், மதுமதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் ஜெயகாந்தன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுமதி எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகின்றனர்.