உள்ளூர் செய்திகள்

கரூரில் வாலிபர் மாயம்

Published On 2023-07-03 11:56 IST   |   Update On 2023-07-03 12:09:00 IST
  • மன நலம் பாதித்த வாலிபர் மாயமானார்
  • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

கரூர்,

கரூர் கடவூர் அருகே உள்ள மணக்காட்டுநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாநாயக்கர். இவரது மகன் சின்னச்சாமி (வயது 33). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சின்னச்சாமி வெகுநேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து சின்னச்சாமியின் ெபற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சின்னச்சாமியின் தாய் பிச்சையம்மாள் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சின்னச்சாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News