உள்ளூர் செய்திகள்
- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது சம்பவம்
- மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியானார்
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அபினேஷ்(19). இவர் கரூர் அரசு கலைக்கல்லுாரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் பள்ளபட்டி நங்காஞ்சி தடுப்பணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அபினேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.