உள்ளூர் செய்திகள்
- நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
- ஆற்றில் குளிக்க சென்றார்
கரூர்:
அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கரூர், வெங்கமேடு செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் மகன் ஆனந்தகுமார் (வயது 26) இவர், சணப்பிரட்டி பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினார். அப்போது கைகளை தூக்கி காப்பாற்றுங்கள் என குறல் அபாய குறல் எழுப்பினார்.
அதனை கேட்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முற்பட்டனர். காப்பாற்ற முடியாததால் தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி ஆனந்தகுமார் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.