உள்ளூர் செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-10-19 12:41 IST   |   Update On 2022-10-19 12:41:00 IST
  • போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்
  • சிறுமியை திருமணம் செய்த

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் சபரி (வயது 18). கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த, 17 வயதுடைய சிறுமியை கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி திருமணம் செய்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி சமூக நல அலுவலர் கமலா, போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சபரியை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News