உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Published On 2023-03-20 07:55 GMT   |   Update On 2023-03-20 07:55 GMT
  • பைக்கில் தனியாக சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி விழுந்தவர் பலி
  • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

கரூர்,

குளித்தலை அருகே, அய்யம்பாளையம் பஞ்., குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மும்முடிவேந்தன் (வயது 34), கூலி தொழிலாளி, இவர், ஃபேஷன் ப்ரோ' பைக்கில் குருணிகுளத்துப்பட்டி தேவர்மலை நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகே, சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம டைந்த மும்முடிவேந்தனை, அருகில் இருந் தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மும்முடிவேந்தன் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் கண்ணம்மாள், புகாரின்படி, சிந்தா மணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.




Tags:    

Similar News