உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் விழுந்து தொழிலாளி சாவு

Published On 2023-09-14 11:56 IST   |   Update On 2023-09-14 11:56:00 IST
  • கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி சாவு
  • படகு மூலமாக தேடி தீயணைப்பு படையினரால் உடல் மீட்கப்பட்டது

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(65). கூலித் தொழிலாளி. இவர் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள புகளூர் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நிலையை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். படகு மூலமாக தேடும் பணி நடைபெற்ற போது முனிநாதபுரம் அருகே தண்ணீரில் வாய்க்காலில் ஓரத்தில் மிதந்து கொண்டு இருந்த அர்ஜுனன் சடலத்தை கைப்பற்றினர்.

Tags:    

Similar News