உள்ளூர் செய்திகள்

பெண்களின் குடுமிப்பிடி சண்டை வீடியோ காட்சி வைரல்

Published On 2022-10-12 09:15 GMT   |   Update On 2022-10-12 09:15 GMT
  • பெண்களின் குடுமிப்பிடி சண்டை வீடியோ காட்சி வைரலானது
  • சொத்து தகராறில்

கரூர்:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள செம்படாபாளையம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு செல்வம்( வயது 55) என்ற மகனும், பாப்பாத்தி (50) என்ற மகளும் உள்ளனர்.

இதில் ஐந்தரை சென்ட் நிலத்தை கோவிந்தராஜ் தனது மகளுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்வம் தங்கை பாப்பாத்தியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

வீடியோ வைரல்

இது தொடர்பான குடும்பப் பிரச்சனை அண்ணன் தங்கை இருவருக்குள்ளும் நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது.பாப்பாத்தி அவரது மகன் நந்தினி ஒரு தரப்பாகவும், செல்வம் அவரது மனைவி தவமணி அந்த தம்பதியரின் மகன் யுவான் சங்கர் ஆகிய மூன்று எதிரணியாகவும் மோதிக்கொண்டனர்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி கொடுமை குடுமி பிடி சண்டையானது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது கரூர் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரு தரப்பினரும் வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News