உள்ளூர் செய்திகள்
கரூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
- க.பரமத்தி ஒன்றியம் சின்னதாரபுரம் பகுதியை சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- சின்னதாராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
கரூர்,
க.பரமத்தி ஒன்றியம் சின்னதாரபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் மேனகா (வயது 37). இவர் கடந்த 7 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருப்பதாக சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தாய் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.