உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து பெண் பலி

Published On 2023-05-30 05:50 GMT   |   Update On 2023-05-30 05:50 GMT
  • இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் வேகத்தடையில் தவறி விழுந்து பலியானார்
  • காயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

கரூர்,

விஸ்வநாதபுரி 'அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசுந்தரம் (64) இவர் தனது டி.வி.எஸ்., ஸ்கூட்டியில், மனைவி தங்கமணி (51) என்பவருடன், சின்னதாராபுரம்-கரூர் சாலை குளத்துார் பகுதியில் சென்று கொண் டிருந்தார். அப்போது, வேகத்தடைமீது மொபட் ஏறி இறங்கிய போது, நிலை தடுமாறி தனசுந்தரமும், தங்கமணியும் கீழே விழுந்தனர். அதில், தலையில் காயம் அடைந்த தங்கமணி, கரூர் அரசு மருத்துவ கல் லுாரி மருத்துவமனைக்கு கொண்டு. செல்லும் வழியில் உயிரிழந்தார். கணவன் தனசுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News