உள்ளூர் செய்திகள்
வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை தொடக்கம்
- குளித்தலையில் வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை தொடங்கப்பட்டது
- கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் குளித்தலை சரகத்தில் குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் "வேப்பம்புண்ணாக்கு அரவை ஆலை மற்றும் விற்பனையகம்" கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சரக துணைப்பதிவாளர் பொறுப்பு ஆறுமுகம் , கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் சந்திரன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய களஅலுவலர் ரமேஷ், தோகைமலை கள அலுவலர் குமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.