உள்ளூர் செய்திகள்

கரூரில் மாணவர் உள்பட இருவர் மாயம்

Published On 2023-04-22 09:57 GMT   |   Update On 2023-04-22 09:57 GMT
  • வீட்டுக்கு திரும்புகிறேன் என்று கூறியவர் காணாமல் போனார்
  • இண்டர்வியூ சென்ற வாலிபரும் மாயம்.

கரூர், 

திருநெல்வேலி மாவட்டம், பண்ணகுடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40) . இவர் கரூர், முத்துவிநாயகர் கோவில் தெருவில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 13ல் திருநெல்வேலிக்கு வருவதாக, மனைவி செல்வியிடம், போனில் தெரிவித்தார்ஆனால், ஆறுமுகம் திருநெ ல்வேலிக்கு செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வி, கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், வெங்கமேடு, கண்ணதாசன் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் நவீன்ராஜ் (வயது 25). பி.சி.ஏ., படித்துள்ளார். இவர் கடந்த, இன்டர்வியூவில் பங்கேற்க, திருச்சி சென்றார். ஆனால், அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து, தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News