உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு மேலக்குறப்பாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா

Published On 2023-06-10 12:38 IST   |   Update On 2023-06-10 12:38:00 IST
  • கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு மேலக்குறப்பாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
  • எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை தி.மு.க. கழக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வதியம் ஊராட்சி பகுதிகளான மேலகுறப்பாளையம் பகுதியில் குளித்தலை நெடுஞ்சாலை துறை சார்பாக கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், குளித்தலை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் சாலை பணியாளர்கள், பொதுமக்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News