உள்ளூர் செய்திகள்

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

Published On 2023-05-02 13:00 IST   |   Update On 2023-05-02 13:00:00 IST
  • கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை போனது
  • இது குறித்து கரூர் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் முத்தரசு (வயது 43). இவர் குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 29-ம் தேதி் வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பால் கனி வழியாக கதவின் பூட்டை உடைந்து மர்ம நபர்கள் நுழைந்து வீட்டிலிருந்த தங்க மோதிரம், செயின், நாணயம், தோடு உட்பட 12 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து கரூர் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News