உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

Published On 2023-07-24 14:00 IST   |   Update On 2023-07-24 14:00:00 IST
  • ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
  • ஓடும் ஆம்புலன்சில் கல்லை கொண்டு தாக்கி உள்ளார்

கரூர், 

மரக்காணம் தாலுகா, கொங்கை நகரை சேர்ந்த உதயகுமார் (வயது 35), கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை, ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு, திருவாரூர் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கருப்பத்துார் பஸ் ஸ்டாப் அருகே, வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை ஒருவர் கல்வீசி உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தையில் திட்டி, தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து, டிரைவர் உதயகுமார் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார், கருப்பத்துார் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், (வயது 26), என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News