உள்ளூர் செய்திகள்
கரூர் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
- கொலையா என்று போலீசார் விசாரணை
- ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கரூர்:
கரூர் திண்டுக்கல் இடையே செல்லும் ெரயில் பாதையில் சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கரூர் ரயில்வே உதவி ஆய்வாளர் கேசவன் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் கையில் விக்கி, கௌசி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.