உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை
- டாஸ்மாக் விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
- அண்ணன் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை
கரூர்
குளித்தலையை அடுத்த தண் ணீர்ப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், (வயது 45). இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது அண்ணன் மோகன்குமாருக்கு கடந்த ஓராண்டாக உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது மேல் சிகிச்சை செலவுக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், கோபாலகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று, கோபாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி ராதா. ஒரு மகன், மகள் உள்ளனர். ராதா அளித்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.