உள்ளூர் செய்திகள்

வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி தீவிரம்

Published On 2023-04-30 06:56 GMT   |   Update On 2023-04-30 06:56 GMT
  • வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது
  • இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது.

கரூர்:

கிருஷ்ணராயபுரம் அடுத்த வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது. சூரியகாந்தி செடிகளுக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து வருகின்றன. மேலும் கோடை மழை பெய்து வருவதால், பூக்களில் விதைகள் பிடித்து வருகிறது. சூரியகாந்தி செடிகள் அறுவடை பணி, சில வாரங்களில் துவங்கவுள்ளது. மேலும் சூரியகாந்தி விதைகள் விலை குறைந்து வருவதால், விவசாயிகளுக்கு ஓரளவு மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது. இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது.


Tags:    

Similar News