உள்ளூர் செய்திகள்
அரவக்குறிச்சி அருகே சமையல் செய்ய தாமதமானதால் மாணவர் தற்கொலை
- அரவக்குறிச்சி அருகே சமையல் செய்ய தாமதமானதால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்
- இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி குளத்துார் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் நவீன் (வயது 23). இவர் அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரியில், பி.ஏ. தமிழ் முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் நவீனின் தாய் சமையல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நவீன் விஷம் குடித்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவீன் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.