உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-07-02 07:30 GMT   |   Update On 2023-07-02 07:30 GMT
  • அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • 18 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது

கரூர்,

கரூர் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் கரியாம்பட்டி, சேமங்கி, அத்திப்பாளையம், உப்புபாளையம் புன்னம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News