உள்ளூர் செய்திகள்
- எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி திடீர் மாயமானார்
- குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), கூலி தொழிலாளி. இவரது மகன் பழனிவேலு, கடந்த, 10-ந் தேதி காலை, 10 மணியளவில் தோகைமலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்.,ராக்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 48), கூலி தொழிலாளி. இவரது மகள் அந்த பகுதி பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரை காணவில்லை. இதுபற்றி கருப்பன் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.