உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது
- வாய்க்கால் பாசனத்தில் அமோகம்
கரூர்,
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கோவக் குளம் கிராம பகுதியில், நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவக்குளம், பிச்சம்பட்டி கிராம பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நெல் சாகுபடி செய்தனர். இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து, தற்போது அறுவடை பணிகளில்விவ சாயிகள் தொடங்கியுள்ளனர். இந்த நல் வயல்கள் கட்டளை வாய்க்காலில் இருந்து பாசனம் பெறுகின்றன. இப்பகுதியில் நெல் விளைச்சல் அடைந்து தற்போது அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கூலி ஆட்கள் பற்றாக் குறை காரணமாக நெல் அறுவடை இயந்திரம் அறுவடை பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.