உள்ளூர் செய்திகள்

மின்துறையில் கேங்மேன்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை

Published On 2023-06-19 14:08 IST   |   Update On 2023-06-19 14:08:00 IST
  • தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை
  • கரூர் மின் ஊழியர் சி.ஐ.டி.யு. மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்

கரூர்,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) கரூர் மண்டல குழு கூட்டம், சி.ஐ.டி.யு. சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் கோவிந்தராசு வரவேற்று பேசினார். கரூர் மண்டல செயலாளர் தனபால், மாநிலத் துணை தலைவர்கள் ஸ்ரீதேவி, கோபலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன் நன்றி கூறினார்.கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் சங்க அலுவலக கட்டிடம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, ஊழியர்களுக்கும் தனி த்தனியாக கழிவறை மற்றும் ஓய்வு அறைகள் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு ஊர் மாற்றம் செய்திட வேண்டும், 60 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5,000 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News