உள்ளூர் செய்திகள்
சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற கோரிக்கை
- சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதி
கரூர்
கரூர், அண்ணா வளைவு பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது, மழை காரணமாக, நிலத்தடி நீர் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.