உள்ளூர் செய்திகள்

கரூரில் பௌர்ணமி கிரிவலம்

Published On 2023-07-03 12:08 IST   |   Update On 2023-07-03 12:08:00 IST
  • கரூர் மாவட்டம் புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது
  • ஆனி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். ஆறுநாட்டார் மலை என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும், புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமான், சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமான், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகிய சுவாமிகளின் போற்றி பாடியபடி புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

Tags:    

Similar News