உள்ளூர் செய்திகள்
- இணைய தளத்தில் வெளி மாநில தொழிலாளர் விவரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
- தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு
கரூர்,
தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள், முடிதிருத்தம் செய்யும் நிலையங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். அவர்களின் விவ ரங்களை வேலை அளிப்பவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தும் முன்பாக தொழிலாளர் நலத்துறையின் வெளிமாநில தொழிலாளர் வலைதள பக்கத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண் விவரம், கைப்பேசி எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.