உள்ளூர் செய்திகள்

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-05-04 11:42 IST   |   Update On 2023-05-04 11:42:00 IST
  • சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
  • ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர்:

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவ புரீஸ்வரர், மேட்டுமருதூார் ஆரா அமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பெரியபாலம் நதி ஈஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகை மலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News