உள்ளூர் செய்திகள்

நொய்யலில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2023-11-02 08:32 GMT   |   Update On 2023-11-02 08:32 GMT
  • நொய்யலில் நாளை மறுநாள் மின்தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
  • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற விருப்பதால் காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 4-ந்தேதி, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News