உள்ளூர் செய்திகள்

கரூர் மார்க்கெட் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

Published On 2022-10-30 14:56 IST   |   Update On 2022-10-30 14:56:00 IST
  • கரூர் பூ மார்க்கெட் சாலை பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன
  • பூ மார்க்கெட் பகுதியில் உள்ள, சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.

கரூர்

கரூர் பூ மார்க்கெட் சாலை பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாள் தோறும் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்நிலையில், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள, சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.

மேலும், மழை பெய்யும் போது குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

எனவே, பூ மார்க்கெட் சாலை பகுதியில் உள்ள, பழுதடைந்துள்ள சாலையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News