உள்ளூர் செய்திகள்

சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி

Published On 2022-11-18 14:52 IST   |   Update On 2022-11-18 14:52:00 IST
  • சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது
  • தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு

கரூர்:

பொது நூலகத்துறை கரூர் மாவட்டம் 55-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு, சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி கரூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ், ஓவிய போட்டி கருத்துறை வழங்கி நடுவராக செயல்பட்டார். கிளை சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டி துவக்கி வைத்து பேசினார். இந்த ஓவிய போட்டியில் 51 சிறைவாசிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓவியம் வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News