உள்ளூர் செய்திகள்
- வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
- மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது
கரூர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 50), இவர் நேற்று மாலை, திண்டுக்கல் - கரூர் சாலை, ஜங்கல்பட்டி பகுதியில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த விஜய் (47) என்பவர் ஓட்டி வந்த கார், இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குழந்தைசாமி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.