உள்ளூர் செய்திகள்
- கார் மோதி ஒருவர் காயமடைந்தார்
- நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது விபத்து
கரூர்:
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் சம்பவத்தன்று லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப் போது அந்த வழியாக வந்த கார், சரவணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வந்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.