உள்ளூர் செய்திகள்

பைக் மோதி மூதாட்டி பலி

Published On 2023-03-20 08:07 GMT   |   Update On 2023-03-20 08:07 GMT
  • நெடுஞ்சாலையை கடந்த போது விபத்து
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கரூர்,

குளித்தலை அருகே திம்மாச்சிபுரம், குடித்தெருவை சேர்ந்தவர் பாக்கியம், (வயது 71). இவர், காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாக்கியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பாக்கியம் மகன் பெரியசாமி புகாரின் படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News