உள்ளூர் செய்திகள்
வேலாயுதம்பாளையம் அருகே - ரத்த பரிசோதனை முகாம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
- நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செல்வநகர் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் சூழ்நிலை உள்ளது. நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் உருவாகிறது. எனவே பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்