உள்ளூர் செய்திகள்

லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2023-10-16 08:38 GMT   |   Update On 2023-10-16 08:38 GMT
  • குளித்தலையில் லாரி மோதி தொழிலாளி பலி; உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்
  • விபத்து ஏற்படுத்திய வாகனம் வழக்கில் சேர்க்கவில்லை என்று குற்றச்சாட்டு

கரூர், 

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயக்கூலித் தொழிலாளி. இவர், மேட்டு மருதூரில் இருந்து பணிக்கம்பட்டிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாகவந்த டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த நிலையில் போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆறு முகம் இறந்ததாக வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் வழக்கில் சேர்க்கப்பட்டது என கூறியதை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Tags:    

Similar News