உள்ளூர் செய்திகள்
- டூவீலர் இருந்த நகை, செல்போன் மாயமானது
- அபேஸ் செய்த 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 35). தனியார் வங்கியின் இன்சூரன்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது பைக் கவரில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை, செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து தினேஷ்குமார், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் 2 மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.