உள்ளூர் செய்திகள்

புகையில்லா போகி கொண்டாட அறிவுறுத்தல்

Published On 2023-01-10 12:59 IST   |   Update On 2023-01-10 12:59:00 IST
  • பழைய பொருட்களை எரிக்க ேவண்டாம்
  • புகையில்லா போகி கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர்

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக, புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் தங்களிடம் உள்ள அனைத்து விதமான வீணான தேவையில்லாத பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தாமலும், வீதிகளிலும், கழிவுநீர் கால்வாய்களில் போடாமலும், தினசரி குப்பைகள் சேகரம் செய்ய வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிடவும், இந்நகராட்சி பகுதியினை சுகாதாரமாக பாதுகாத்திட ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்..

Similar News