உள்ளூர் செய்திகள்

சாரணர் இயக்க தொடக்க விழா

Published On 2023-10-22 12:10 IST   |   Update On 2023-10-22 12:10:00 IST
  • தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளியில் சாரணர் இயக்க தொடக்க விழா நடைபெற்றது
  • அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

கரூர்,

தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரத் சாரணர் இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாந்தி கலந்து கொண்டு இயக்கத்தை வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சாரணர் இயக்க கமிஷனர் முத்துசாமி, சாரணர் மாவட்ட ஆர்கனைசிங் ஆணையர் வெங்கடேசன் மற்றும் கோபிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பள்ளியின் முதல்வர் ஜெயசித்ரா அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் சாரண இயக்கத்தினுடைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாந்தி அவர்கள் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News