உள்ளூர் செய்திகள்

வேலாயுதம் பாளையம் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை

Published On 2023-11-08 12:24 IST   |   Update On 2023-11-08 12:24:00 IST
  • பல்வேறு பகுதிக ளில் இரவு சுமார் 8.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
  • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூர்த்தி பாளையம் ,கடம்பங்குறிச்சி, வாங்கல், நெரூர், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பா ளையம்,

பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம்,கட்டிபாளையம், தவுட்டுப்பா ளையம் பாலத்துறை, நன்செய் புகளூர், கந்தம்பாளையம், ஓலப்பா ளையம் ,ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில் ,தளவாபா ளையம், தோட்டக்குறிச்சி ,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இரவு சுமார் 8.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து மழை தொ டர்ந்து விடிய விடியபெய்தது .இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர் . அதேபோல் சாலையோரம் போடப்பட்டிருந்த அனைத்து கடைக்கா ரர்களும் வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர். அதேபோல் தொடர் மழையின் காரணமாக சாலைகளின் ஓரங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக பெரிய வாகனங்கள் வேகமாக செல்லும்போது வாகனத்தின் டயர்கள் மழை நீரில் பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மழை நீரை தெளித்து வருகிறது. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் டயர்களில் இருந்து படும் தண்ணீரால் நனைந்து கொண்டே சென்று அவதிப்பட்டு செல்கின்ற னர்.

தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது .கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொது மக்கள், அவதிப்பட்டனர். தொடர் மழையின் காரண மாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News