உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர் உறவினரிடம் ஒப்படைப்பு

Published On 2023-03-06 08:30 IST   |   Update On 2023-03-06 08:30:00 IST
  • ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்
  • 75 நாட்களுக்கு பின்னர் குணமடைந்தார்

கரூர்,

குளித்தலையை அடுத்த, கழுகூர் பஞ்., உடையாபட்டி பஸ் நிறுத்தம் அருகே, கடந்த டிசம்பர் 15ல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், 32 வயது, ஆந்திர மாநில இளைஞர் மஞ்சுநாதா என்பவர் மீட்கப்பட்டார்.

தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், சாந்திவனம் மனநல மீட்பு குழு ஒருங்கி து ணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் முயற்சியில், சாந்திவனம் மன நல மருத்துவம் மற்றும் மறு வாழ்வு பயிற்சி மையத்தில் அந்த இளைஞர் சேர்க் கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், குணமடைந்த மஞ்சுநாதாவை, ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வெங்கமாவரிப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது சித்தி ஹேமலதா, ஊர் முக்கி பஸ்தர்கள் முன்னிலையில், சாந்திவனம் இயக் குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதவாளன், செவிலியர் சித்ரா, ஓட்டுநர் மோகன்ராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News