உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-08-31 11:49 IST   |   Update On 2023-08-31 11:49:00 IST
  • வாங்கல் அருகே படிக்க முடியவில்லை என்ற வேதனையில்அரசு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே பெரிய வள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள்நர்மதா (வயது 14). இவர் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நர்மதா தன்னால் பள்ளிக்கூடத்திற்கு சென்று சரியாக படிக்க முடியவில்லை என்றும், அவ்வாறு படித்தாலும் படித்த பாடங்கள் மறந்துவிடுகிறது என்றும் வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் கூறி வந்தார். பெற்றோர்கள் அவரை சமாதானப்படுத்தி வந்தனர். படிப்பு வராததன் காரணமாக மன உளைச்சலில் இருந்த நர்மதா வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் உள்ள விட்டதில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆனந்தராஜியின் உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நர்மதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News