உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி

Published On 2022-12-27 15:06 IST   |   Update On 2022-12-27 15:06:00 IST
  • விளையாட்டு போட்டியில் அரசு கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்
  • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்

கரூர்:

கரூரில் மாநில அளவில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் முதல் பரிசை நாமக்கல் மாவட்ட அணியும், இரண்டாம் பரிசை கரூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட அனைத்து பேராசிரியர்களும், பாராட்டினர்.




Tags:    

Similar News