உள்ளூர் செய்திகள்

எறிபந்து அணிக்கு அரசு கல்லூரி மாணவி நந்தீஸ்வரி தேர்வு

Published On 2023-08-24 09:30 GMT   |   Update On 2023-08-24 09:30 GMT
  • கரூர் மாவட்ட எறிபந்து அணிக்கு அரவக்குறிச்சி அரசு கலலூரி மாணவி நந்தீஸ்வரி தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
  • மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை, முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்

கரூர்,

தமிழ்நாடு எறிபந்து கழக அனுமதியுடன், சேலம் மாவட்ட எறிபந்து விளையாட்டு சங்கம் சார்பில், 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கரூர் மாவட்ட அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி நத்தீஸ்வரி தேர்வு பெற்றுள்ளார். மாவட்ட அணிக்கு தேர்வான மாணவியை கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News